Thursday, June 4, 2009

புது பொண்ணுக்கு வாழ்த்து சொல்லலாம், வாங்க!!

'மை ஃபிரண்ட்' அனுவுக்கு வரும் ஜூன் 6ஆம் தேதி நிச்சயதார்த்தம் நடக்கவுள்ளது. பல காலமாக வலைப்பூ உலகில் கொடி கட்டி பறக்கும் ஒருத்தர் தான் நம்ம அனு அக்கா! இமெயிலில் செய்தி வந்தவுடன் ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு! இந்த ப.பா சங்கத்திற்கு என்னை உறுப்பினர் ஆக்கியதே இவர் தான். பல வகையில் ஊக்கவித்து உள்ளார்.(hairpin, band எல்லாமுமே வித்துவுள்ளார்.)

அனு அக்காவுக்கு வாழ்த்துகள்!!!

அக்கா தற்போது ரொம்ப பிஸியா இருப்பாங்கோ!

கொஞ்ச நாளைக்கு முன்னாடி அழைப்பிதழை பார்த்தபோது, அக்காவிடம்

"என்னக்கா என்கிட்ட சொல்லவே இல்ல.... அதுக்குள்ள கல்யாணமா?"

அக்கா: "ஓய்..சரியா பாரு... அது கல்யாணம் invitation இல்ல...வெறும் நிச்சயதார்த்தம் தான்...கல்யாணம் அடுத்த வருஷம்."

நான்: "ஓ... ஐ சி.. ஐ சி... மாமா பெயரு நல்லா இருக்கே!"

ஆமாங்கோ அக்காவை கைப்பிடிக்க போற அந்த கொடுத்தவைத்தவரின் பெயர் விஜய்!(முழுபெயர் விஜயகுமார்) இவர்களுக்காக ஒரு சூப்பர் பாட்டு dedicate பண்ணுறேன்...

Thursday, April 30, 2009

முப்பெரும் விழா

"டாக்டர்! இன்னைக்கு ஆபரேஷன் நடக்கப்போற அந்த பேஷண்டுக்கு கல்யாண நாள், பிறந்தநாள் இரண்டுமே இன்னைக்குத்தானாம்!"

"அடுத்த வருஷம் முப்பெரும் நாளா அவங்க பிள்ளைங்க கொண்டாடுவாங்க!"

-----------------------------------------------

நேருக்கு நேரா பேயைப் பார்த்தாக்கூட அதோ போறானே அவன் பயப்படமாட்டான்"

"ஏன்..?"

"அவன் சினிமா நடிகைகளுக்கு மேக்கப் மேனாக பத்து வருஷமா இருக்கிறான்."

-----------------------------------------------

"மாப்பிள்ளை ரொம்பக் கறுப்போ?"

"ஏன்?"

"வெளுப்பா தெரியறதுக்கு நெகடிவ் அனுப்பி வெச்சிருக்காரே!"

------------------------------------------------

"எங்கப்பா அம்மா சொன்ன பேச்சை நான் சின்ன வயசிலிருந்தே கடைப்பிடிச்சுட்டு வரேன்!"

"அப்படியா... சின்ன வயசுல என்ன சொன்னாங்க?"

" 'நீ உருப்படவே மாட்டே'ன் னாங்க!"

------------------------------------------------

"உன்னோட மாமியார் கிணத்திலே விழுந்திட்டாளாமே. அப்புறம் என்ன ஆச்சு?"

"நான் பக்கத்து வீட்டு கிணத்திலேதான் தண்ணி எடுத்துக்கிறேன்!"

நன்றி: தமிழ் ஜோக்ஸ்

Friday, April 10, 2009

காக்க காக்க ரீமேக்

படங்களை ரீமேக் செய்யும் காலம் இது!! ஆக, ப.பா சங்கம் ஒரு படத்த ரீமேக் செய்ய போகுது... அதுக்கு நல்ல ஜோடிய தேடுறோம்!


மேல்காட்டப்பட்ட சீன்னை இவர்கள் சொல்லியிருந்தால்....

சூர்யாவாக சாலமன் பாப்பையா (acp பாப்ஸ்)

ஜோவாக 'பருத்திவீரன்' பிரியாமணி

பிரியாமணி அழுது கொண்டே: ஏன்ய்யா,நீயா? ஏண்டா இந்த பக்கம் வந்தே?

பாப்ஸ்: எனக்கு இங்க வேற யாரும் தெரியாதுலே. உன்கூட தான் பேசனும்னு நினைச்சேன்லே! வா...பழகுவோம்ய்யா!

***
பாப்ஸ்: ஏன் புள்ள, உனக்கு என்ன தான் வேணும்?

பிரியாமணி: புரியல்ல...(அழுது கொண்டே...)

பாப்ஸ்: நம்மல பொறுத்தவரைக்கும் நீ எனக்கு என்ன வேணும்ய்யா...(குரல் கொஞ்சம் கம்மி செய்துகொண்டு)

பிரியாமணி: நான் உன்னை கல்யாணம் பண்ணிக்கனும்டா! உன்கூட என் வாழ்க்கைய வாழனும்டா. உன்கூட நான் இருக்கனும்டா. உன்கூட சிரிச்சு பேசனும்டா. சண்ட போடனும்டா... உன் தோள்ல சாஞ்சி அழனும்டா.. இன்னிக்கு மாதிரியே என்னிக்கும் உன் மேல பைத்தியமா இருக்கனும்டா (தலை முடியை பிடித்து கொண்டு அழுகிறார்)

மூன்னு குழந்தைய பெத்துக்கனும்டா. பாக்கறதுக்கும் பழகறதுக்கும் அதுங்க உன்னைய மாதிரியே இருக்கனும்டா. இந்த கண்ண பாத்துகிட்டே இருக்கனும்டா.
அப்பரம் ஒரு நாள் செத்துபோயிடனும்டா! (சத்தம் போட்டு அழுகிறார்)
அவ்வளவுதான் டா எனக்கு வேணும்! உன்னைய எனக்கு ரொம்ப பிடிக்கும்டா. (பாப்ஸ் காலை பிடித்து அழுகிறார்)


பாப்ஸ்: ஏன்ய்யா? நான் யூத் கிடையாதுய்யா! நான் ஒரு பட்டிமன்ற நடுவர்ய்யா... என்னைய சுத்தி எப்போதே 4 பேரு பேசிகிட்டே இருப்பாங்கலே. என்னைய சேர்ந்தவங்கள அது பாதிக்கும்யா! உனக்கும் எனக்கும் எம்புட்டு வயசு வித்தியாசம் இருக்கு! ஏன் நான்?


பிரியாமணி: அது ஒரு பொண்ணுக்கு தான்டா விளங்கும்! உனக்கெல்லாம் எங்கடா புரிய போகுது....


பாப்ஸ்: சரிய்யா, கல்யாணம் பண்ணிக்கலாம்! உன்னைய எனக்கு ரொம்ப பிடிக்கும்லே. கல்யாணம் பண்ண... நாளை சந்திப்போமா?

இயக்குனர்: cuT!!!!!!!!! ஏங்க பிரியாமணி, இந்த சீன்ல ஜோதிகா எப்படி அழகா நடிச்சிருக்கும். உனக்கு நடிப்புன்னாவே அழதான் தெரியுமா? போ போ.... யோவ் assistant அடுத்த ஜோடிய வர சொல்லு. இந்தா பிரியாமணி, பாப்ஸ் கொஞ்ச நேரம் போய் உட்காருங்க. அப்பரம் கூப்பிடுறோம்.

அடுத்து சூர்யாவாக வைரமுத்து
ஜோவாக நமீதா

நமீதா: ஏ மச்சான்ஸ்? ஏண்டா இந்த பக்கம் வந்து?

வைரமுத்து: எனக்கு இங்கு வேற யாரையும் தெரியாது. உன்கூட தான் பேச வேண்டும் என்று மனம் துடிக்கிறது.
***

வைர: ஏன் நமீதா, உனக்கு என்ன வேண்டும்?

நமீதா: எனக்கு ஒன்னும் புரியுது? (புரியல்ல)

வைர: நம்மை பொறுத்தவரைக்கும் நீ எனக்கு என்ன வேண்டும்? மனைவியா?சிநேகிதியே?(எச்சில் தெறித்தது)


நமீதா: நான் உன்னை கல்யாணம் பண்ணிக்கனும் மச்சான்ஸ்! உன்கூட என் life வாழது. உன்கூட நான் இருக்குது. உன்கூட சிரிச்சு பேசுது. சண்ட போடுது... உன் தோள்ல சாஞ்சி அழது.. இன்னிக்கு மாதிரியே என்னிக்கும் உன் மேல பைத்தியமா இருக்குது three kids பெத்துகுது. பாக்கறதுக்கும் பழகறதுக்கும் அது உன்னைய மாதிரியே இருக்குது. இந்த கண்ண பாத்துகிட்டே இருக்குது.

அப்பரம் ஒரு நாள் செத்துபோது! அவ்வளவுதான் மச்சான்ஸ்!(சிரிக்கிறார் நமீதா)

வைர: ஏன்? நான் இளரத்தம் கிடையாது! நான் ஒரு பாடலாசிரியர்.. என்னை சுற்றி எப்போதுமே 4 பேரு பாட்டு எழுத சொல்லி கொண்டே இருப்பார்கள். அது என்னை சுற்றியுள்ளவர்களை பாதிக்கும். உனக்கும் எனக்கும் வயது வித்தியாசத்தை பார்த்தாயா? அப்படி இருந்தும் ஏன் என்னை...? (வெள்ளை ஜிப்பா பாக்கேட்டில் கையைவிட்டு வானத்தை பார்க்கிறார்)


நமீதா: நான் இட்லி சாப்பிடுது. இடியாப்பம் சாப்பிடுது. நான் ஒரு தமில்நாட்டு புண்ணு!அது ஒரு புண்ணுக்கு தான் விளங்குது!


வைர: சரி. கல்யாணம் செய்து கொள்ளலாம்! உன்னை எனக்கு ரொம்ப பிடிக்கும்.
உன்னை பார்த்த முதல் நாளே
கண்கள் கடிதமானது
இதயம் இன்பாக்ஸானது!

இயக்குனர்: cutttttttttttttt!! நமீதா சூப்பரா நடிச்சீங்க! யோவ் assistant, மேடத்துக்கு ஆப்பிள் ஜூஸ் கொடு! வைரமுத்து சார், நீங்க கொஞ்சம் தமிழ்ல பேசி நடிக்க முடியுமா? நீங்க பேசின தமிழ் வெள்ளக்காரங்களுக்கு மட்டும் தான் புரியும். நம்ம ஆளுங்களுக்கு விளங்காது. சோ கொஞ்சம் ப்ளீஸ்....

assistant: director சார், இன்னொரு ஜோடி ரொம்ப நேரமா வேட் பண்ணிகிட்டு இருக்காங்க.

இயக்குனர்: வர சொல்லுய்யா!

(கவுண்டமணியும், ஜெனிலீயாவும் உள்ளே வர)

சூர்யாவாக கவுண்டர்
ஜோவாக ஜெனிலீயா


ஜெனிலீயா குதித்து கொண்டே(தோள்பட்டையில் நீல கலர் பை): ஏ என்ன மேன்,நீயா? ஏண்டா இந்த பக்கம்?(லூசுத்தனமாக சிரிக்கிறார்)


கவுண்டர்: ஹாலோ லேடிஸ்,எனக்கு இங்க வேற யாரும் தெரியாது. உன்கூட தான் பேசனும்னு நினைச்சேன்! let's go talk ya.
***

கவுண்டர்: உனக்கு என்ன வேணும்?

ஜெனிலீயா: என்ன சந்தோஷ், நீ சொல்றத புரியல்ல...

கவுண்டர்: அட கொடுமைக்கு பொறந்த கொடுமையே! நம்மல பொறுத்தவரைக்கும் நீ எனக்கு என்ன வேணும்ம்ம்ம்ம்?(குரலை உயர்த்தி கத்துகிறார்)

ஜெனிலீயா(அமைதியாக, உதட்டை கடித்துகொண்டு): நான் உன்னை கல்யாணம் பண்ணிக்கனும்! அப்பரம்...உன்கூட பைக்கல ஊர் சுத்தனும். நாயர் கடையில டீ குடிக்கனும். பக்கத்துவீட்டு பையன்கூட கோலி விளையாடனும்.மொட்ட மாடில ஜஸ்கீரிம் சாப்டனும். உன்கூட சிரிச்சு பேசனும். சண்ட போடனும்... .. நிறைய குழந்த பெத்துக்கனும். அப்ப தான் சந்தோஷ், எதித்தவீட்டு ஆண்ட்டி பிள்ளைங்ககூட கிரிக்கெட் ஆட முடியும். பாக்கறதுக்கும் பழகறதுக்கும் அதுங்க உன்னைய மாதிரியே இருக்க கூடாது. என்னைய மாதிரி இருக்கனும் சந்தோஷ்.


(முகத்தை பாவமாக வைத்து கொண்டு)
அப்பரம் ஒரு நாள் செத்துபோயிடனும் சந்தோஷ்! அவ்வளவுதான் எனக்கு வேணும்!

கவுண்டர்: ஏன்? நான் யூத் தான்! இவ்வளவு ஆம்பளைங்க இருக்கும்போது இந்த ஆல் இன் ஆல் அழகுராஜ்வ why selected? நான் ஒரு அரசியல்வாதி. என்னைய சுத்தி 4 அள்ளகைங்க, 5 நாத்தாரிங்க, 6 பிக்பாக்கெட் இருப்பாங்க. என்னைய சேர்ந்தவங்கள அது பாதிக்கும்! நீ என்னையவிட 3 வயசு மூப்பு.அரசியல இதெல்லாம் சகஜமா இருந்தாலும், இந்த விஞ்ஞான உலகத்துல....


ஜெனிலீயா: அது ஒரு பொண்ணுக்கு தான் விளங்கும் சந்தோஷ்! உனக்கெல்லாம் அது புரியாது சந்தோஷ். (கண்ணை கசக்குகிறார்)

கவுண்டர்: சரி சரி...லேடீஸ் அழுதா என் heart தாங்காதும்மா! கல்யாணம் பண்ணிக்குவோம்!வாலிப வயசுல இதெல்லாம் சகஜமப்பா!(ஜெனிலீயாவோடு கை குலுக்குகிறார் ஒரு romantic look கொடுத்து...)

இயக்குனர்: cutttttt!! இந்த 3 ஜோடில யார select பண்றது?????

Monday, April 6, 2009

'மரியாதை' பார்த்தால் மரியாதை கெடுமா?

சமீபத்தில் அதிக எதிர்பார்ப்பை கிளப்பியுள்ள மரியாதைக்குரிய படம் மரியாதை. விஜயகாந்த் என்றாலே நிறைய பேருக்கு சிரிப்பு வந்துவிடுகிறது. அதுவும் சமீபகாலமாக அது அதிகமாய் போக, அனைவரும் முந்தி அடித்துகொண்டு படத்தை பார்க்க துடிக்கின்றனர். அன்று ஒரு திரையரங்கில் இப்படத்தின் போஸ்டர் பார்த்தேன். போஸ்டரை பார்த்தே அரை மணி நேரம் சிரித்தேன். படத்தை பார்த்தால் எவ்வளவு மஜாவாக இருக்கும்!

இப்போது விக்ரமன் படங்கள் அவ்வளவாக ரசிகர்களை கவருவதில்லை. அதை அறிந்தே அவர் விஜயகாந்தை ஹீரோவாக போட்டுள்ளார் என்று நினைக்கிறேன்.அவரது சிஷயர்கள் கேஸ் ரவிகுமார் போன்றோர் பெரிய பட்ஜெட் படங்களை எடுக்கிறார்கள். நாமும் அப்படி எடுக்கவேண்டும் என்று நினைத்து இப்படத்தை அதிக பொருட்செலவில் எடுத்துள்ளார். பாருங்க இந்த ஸ்டில்லை...

பொதுவாக ஒரு கேமிரா வைத்து எடுக்கலாம். ஆனால், ஒரு கேமிராவுக்குள் அதுவும் ஒரு frameக்குள் இருவரையும் கொண்டு வந்திருக்க முடியுமா? ஆக, அநேகமாக ரெண்டு மூணு கேமிராவை வைத்து இந்த ஸ்டில்லை எடுத்து இருப்பார்! ஒரு சின்ன ஸ்டில்லுக்கே இப்படி என்றால்... முழு படத்தை எந்த மாதிரி எடுத்து இருப்பார் என்பதை கொஞ்சம் யோசித்து பார்க்க வேண்டும்! ஆக, அதிக பொருட்செலவு தானே!

விக்ரமன் படம் என்றாலே ஒரு 'லல்லலா லல்லலா..." தீம் மியூசிக் இருக்கும் அதுக்கு சொந்தக்காரர் ராஜ்குமாராக தான் இருப்பார்! ஆனால் இப்படத்தின் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி! யப்பா... என்ன நடக்கபோகுதே. மனதில் பீதியையும் மீதியை வயிற்று கலக்களால் போக நேரிடும் பேதியையும் நினைத்து பார்த்தாலே... நெஞ்சு பகீர் என்கிறது. அதுவும் இப்படத்தில் "இன்பமே, உந்தன் பெயர் பெண்மையோ" பாடலை ரீமிக்ஸ் செய்து நம்மை இன்னும் ஆச்சிரியத்தில் ஆழ்த்திவிட்டது 'மரியாதை'. இப்பாடல் ஆஸ்திரேலியாவில் படமாக்கப்பட்டதாம்!(கொடுமை.. சரி விடுங்க)

படத்தில் மீரா ஜாஸ்மின், சீனியர் நடிகை மீனா, சீனியரின் சீனியர் நடிகை அம்பிகா... இன்னும் எத்தன ஹீரோயின் இருக்க போறாங்கன்னு தெரியல. மீனா, அம்பிகா.. சரி ஒகே.. வயசாச்சு.. பரவாயில்ல. ஏங்க மீரா ஜாஸ்மீன், உங்களுக்கு ஏங்க இப்படி... ! பாவமா இருக்கு உங்கள நினைச்சா...அவ்வ்வ்வ்வ்வ்வ்

இப்படத்தை பார்த்தே தீருவேன் என்று சில நண்பர்கள் ஆவலாய் காத்திருக்கிறார்கள். அவர்களுக்கு ஆல் தி பெஸ்ட்.

ஜே.கே ரித்தீஷை வீழ்த்த வந்த சாம்!

எம்ஜிஆர்-சிவாஜி, ரஜினி-கமல், விஜய்-அஜித், தனஷ்-சிம்பு என்று ஒரு பட்டியல் இருக்கிறது! அந்த வரிசையில் ரீத்தீஷ்-சாம் ஆண்டர்சன் வந்துள்ளனர். ஜே கே ரித்தீஷுக்கு ஒரு பெரிய ரசிகர் பட்டாளமே இருக்கிறது. ஆனால், இவருக்கு ஆண் ரசிகர்கள் தான் அதிகம்! யார் ஒருத்தருக்கு பெண் ரசிகர்கள் இருக்கிறதோ அவருக்கு தான் மவுசு அதிகம், நம்ம சூர்யா, மாதவன பாருங்க அந்த மாதிரி. ஜே கே ரீத்திஷ் கலக்கிகொண்டிருக்கிறார் என்று ஒரு புரம் இருக்க, அவரை வீழ்த்த வந்துவிட்டார் சாம் ஆண்டர்சன். நடிப்பிலும் சரி, ஆடல் காட்சிகளிலும் சரி, உணர்ச்சிபூர்வமான காட்சிகளிலும் சரி மனதைவிட்டு நீங்கா இடத்தில் stool போட்டு உட்கார்ந்து இருக்கிறார்.

ஹீரோயினிடம் அவர் இயல்பாய் பேசியதை பார்த்து நான்கு நாட்கள் தூக்கம் இல்லாமல் தவித்த பெண் ரசிகர்கள் ஏராளம். அந்த வீடியோவை பாருங்க....



ஹீரோயின் நம்மைவிட அரை அடி உயரம் என்றபோதிலும், தனது வசீகர பார்வையால் ஹீரோயின் மனதில் நமது செருப்புகளிலும் இடம் பிடித்துவிடுகிறார் இந்த கருப்பு மாதவன்! ஹீரோயினிடம் தண்ணி அடிச்சுட்டு பாட சொல்வது தமிழ் சினிமாவின் இன்னொரு புதுமை!

ஆங்கில புலமை கொண்ட விஜய்காந்துக்கே மிரட்டல் விடும் அளவுக்கு எங்கள் மார்டன் சூர்யா ஆங்கிலம் பேசுவது அருமையிலும் அருமை! மஞ்ச காட்டு மைநா என்று பெண்களை பார்த்து பாடும் காலம் மலை ஏறிபோச்சு. வந்துவிட்டார் எங்கள் மஞ்ச காட்டு நைனா!



ஒவ்வொரு படத்தின் ப்ளஸ் அதன் கிளைமெக்ஸ் காட்சியாக இருக்கவேண்டும். அப்படி நிறைய படங்கள் அமைவதில்லை. நாயகன், கன்னத்தில் முத்தமிட்டால், குட்டி, சேது போன்ற ஒருசில படங்களே கிளைமெக்ஸில் நம்மை உருக வைத்தது. அந்த வரிசையில் இப்படத்தின் கிளைமெக்ஸ் தாய்க்குலங்களின் கண்களை கண்ணீர் குளமாக்கியது. இந்த காட்சியை பார்த்த பிறகு, இவருக்கு நிறைய பெண் ரசிகர் மன்றங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அதுமட்டும் அல்லாமல், 60 அடி உயரத்தில் இவருக்கு ஒரு கட் அவுட், கண்ணம்மாபேட்டையில்!

நமது கலாச்சாரத்தில் புதுமையை புகுத்தி, கல்யாணம் முடிந்து காரை சுற்றி வருகிறார் இந்த பெண்களின் நாயகன்! நிச்சயம் நீங்கள் கண் கலங்குவீர்கள். ஆக, ஒரு கைகுட்டையை கையில் வைத்து கொள்ளுங்கள்.... இதுக்கு மேல என்னால எழுத முடியல... கண்ணு கலங்கிட்டு!! :(


அவரின் தீவிர ரசிகர்கள் அவருக்கு கொடுக்க போகும் பட்டம் "புரட்சி புறா"

Wednesday, March 18, 2009

நம்மூரு சென்னையிலே

சமீபத்தில் 'அதே நேரம் அதே இடம்' படத்தில் கங்கை அமரனின் இளைய மகன் பிரேம்ஜி அமரன் இசையமைக்க, பிரேமின் அண்ணன் வெங்கட் பிரபு பாட ஒரு பாடல் வெளிவந்தது.



பாடல்: நம்மூர சென்னையிலே நாள்தோறும் வீதியிலே

பல நூறு பொண்ணுங்கள பாத்தேனே
......
.....

பச்சோந்தி தேவலடா, அந்த பொண்ணுங்க மோசமடா
அந்த விஷயம்கூட தேவலடா, நம்ம ஆபத்து பொண்ணுங்கடா..

என்று வரும் அப்பாடல்.


இந்த பாடலை கேட்டு கொதித்து எழுந்த சில தோழிகளின் கோபங்களை அடக்க முடியவில்லை. online chat status, facebook status, orkut community- இப்படி எல்லா இடங்களிலும் இந்த பாடலுக்கு எதிர்ப்பு தெரிவித்த தோழிகளிடம் நான் சொன்னது,



"விடு விடு.... சில பொண்ணுங்க உண்மையிலே அப்படி தானே... சும்மா பாட்டு தானே விட்டு தள்ளு."



எனக்கும் சேர்த்தே கண்டனம் தெரிவித்து, வன்மையாக கண்டித்தனர். ஹாஹா... என்ன செய்ய? அவர்களிடம் அதிகாரப்பூர்வமான ஒரு மன்னிப்பை போட்டு, அவர்கள் அமைத்த திடீர் சங்கத்திற்கு என்னை உறுப்பினராக மாற்றிவிட்டனர். எனக்கு கொடுத்த முதல் வேலை, சங்கத்திற்கு ஒரு tagline அமைப்பது. மூளையை கசக்கி பிழிந்து யோசித்தால்... ஒன்னும் வேலைக்கு ஆகல.



ஆக, ஒரு முடிவுக்கு வந்தேன். ஏதேனும் ஒன்றை ரீமேக் பண்ணிவிடலாம்னு.

ஆட்டோ பின்னாடி பார்த்திருக்கும் வாசகம்,



"சீறும் பாம்பை நம்பு, சிரிக்கும் பெண்ணை நம்பாதே!"



ரீமேக் செய்த வடிவம்,



"அச்சுறுத்தும் அனக்கோண்டாவை நம்பு, ஆசையாய் பேசும் ஆண்களை நம்பாதே!"



மீ த எஸ்கேப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்!

Thursday, March 5, 2009

ஆண்களின் டைரியிலிருந்து....

ஆண்கள் பெண்களிடம் சொல்லும் சட்டங்கள்:

  1. ஞாயிற்றுகிழமை= கிரிக்கெட் பார்த்தல். எழுதப்படாத சட்டத்தில் இதுவும் ஒன்று
  2. shopping கிரிக்கெட் மாதிரி அல்ல. அப்படி நாங்க நினைக்கபோவதும் இல்ல.
  3. அழுவது என்பது blackmail.
  4. உங்களுக்கு ஒன்னு வேணும்னு, தெளிவா சொல்லிடுங்க. மறைமுகமா கேட்பது, புதிர் போட்டு பேசுவது, தெளிவா குழப்புவது- இது எதுவுமே வேலைக்கு ஆகாது!
  5. பிறந்தநாட்களும், கல்யாண தேதியும் எங்களுக்கு நினைவில் இருக்காது. ஆக, அவற்றை நாள்காட்டியில் குறித்துவைங்க. எங்களுக்கு ஒரு வாரத்துக்கு முன்னாடியே சொல்லிடுங்க, ப்ளீஸ்!
  6. 'ஆம்' மற்றும் 'இல்லை'- இவை இரண்டுமே சமமான பதில்கள், எல்லா கேள்விகளுக்குமே.
  7. பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என்றால் மட்டுமே எங்களிடம் வாங்க. அனுதாபம் வேண்டும் என்றால் உங்களோட படித்த எல்கேஜி தோழிகளை போய் பாருங்க.
  8. நாங்கள் 6 மாசத்துக்கு முன்னாடி சொன்னவற்றை இன்று போடும் சண்டையில் இழுக்க கூடாது. நாங்கள் என்ன சொன்னாலும், 7 நாட்களுக்கு மட்டுமே செல்லுபடி ஆகும்.
  9. நீங்கள் குண்டாக இருக்கீங்கன்னு நினைத்தால், நினைத்துகொள்ளுங்கள். உண்மையிலே நீங்க அப்படிதான். எங்ககிட்டு வந்து கேட்காதீங்க. பதில் சொல்ல விருப்பமில்லை.
  10. நாங்கள் சொல்வது சில, உங்களை காயப்படுத்தும் அல்லது கோபப்படுத்தும். எங்கள் நோக்கம் இரண்டுமே.
  11. எங்களிடம் ஒன்றை செய்ய சொல்லுங்கள் அல்லது எப்படி செய்ய வேண்டும் என்று சொல்லுங்கள். இரண்டையுமே ஒரே நேரத்தில் சொல்லாதீங்க. அந்த வேலையை பற்றி முழுமையா தெரிந்தால், நீங்களே செய்யலாம். எங்களுக்கு எந்த வருத்தமும் இல்ல.
  12. எது சொல்ல வேண்டும் என்றாலும், டிவி விளம்பரங்கள் நேரத்தில் மட்டுமே சொல்லுங்க. live match நடந்து கொண்டிருக்கும்போது....மூச்!!
  13. கோலாம்பஸுக்கு திசைகள் தேவைப்பட்டது இல்லை. நாங்களும் அப்படிதான். காரில் செல்லும்போது கொஞ்ச நேரம்.....'shut up'
  14. எங்களிடம் உலக பொருளாதாரம், அமெரிக்கா வரலாறு, கிரிக்கெட், மொக்கை ஜோக்ஸ்-இதை பத்தி பேச விருப்பம் என்றால் மட்டுமே கேளுங்க இல்லை என்றால் நாங்கள் அமைதியாக இருக்கும்போது என்ன நினைக்குறீங்க என்று கேட்காதீங்க.
  15. I am in shape. ROUND is a shape too.
இதை உங்க மனைவியிடம் சொன்னால், நீங்க அநேகமா இன்று இரவு ஹாலில் அல்லது வீட்டு திணையில் தான் படுக்க நேரிடும். இருந்தாலும் பரவாயில்ல, camping போன உணர்வு கிடைக்கும்! அப்படி வெளியே படுக்க பயம் என்றால், உடனே ஒரு ரோஜா பூவை வாங்கி மனைவிடம் கொடுத்து இதை சொல்லுங்க,

"happy women's day!"

கண்டிப்பா சந்தோஷப்படுவாங்க. மார்ச் 8ஆம் தேதி அன்று மகளிர் தினத்தை கொண்டாடும் அனைத்து பெண்களுக்கு எங்க சங்கத்தின் வாழ்த்துகள்!:)

 

BLOGKUT.COM